

சண்டாலி,
உத்தர பிரதேசத்தின் சண்டாலி நகரில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்து முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் பேசும்போது, சமாஜ்வாடி கட்சியின் ஆட்சியில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் இல்லை.
ஆனால், பா.ஜ.க. அரசு கடந்த 4.5 ஆண்டுகளில் 4.5 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகளை இளைஞர்களுக்கு வழங்கி உள்ளது. இதனை ஒருவரும் கேள்வி கேட்க முடியாது. முன்பு 12 மருத்துவ கல்லூரிகள் மட்டுமே இருந்தன. ஆனால், நாங்கள் 33 அரசு மருத்துவ கல்லூரிகளை கட்டி வருகிறோம் என்று அவர் கூறியுள்ளார்.