காஷ்மீரில் என்கவுண்ட்டர்; 2 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு

காஷ்மீரில் நடந்த என்கவுண்ட்டரில் 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்து உள்ளனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

சோபியான்,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் ஜைனபோரா பகுதியில் செர்மார்க் என்ற இடத்தில் பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படையினர் இடையே இன்று துப்பாக்கி சண்டை நடந்தது.

இந்த என்கவுண்ட்டரில் 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்து உள்ளனர். அவர்கள் சந்தோஷ் யாதவ் மற்றும் சவான் ரோமித் தனாஜி என அடையாளம் காணப்பட்டு உள்ளனர். இதேபோன்று மோதலில் ஒரு பயங்கரவாதியையும் வீரர்கள் சுட்டு கொன்றுள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com