நிலவின் சுற்றுவட்டப்பாதையில் நுழைந்தது, சந்திரயான்-2

நிலவின் சுற்றுவட்டப்பாதையில் சந்திரயான்-2 விண்கலம் நுழைந்தது. அடுத்த மாதம் 7-ந்தேதி அது நிலவின் தென்துருவப்பகுதியில் தரை இறங்கும்.
நிலவின் சுற்றுவட்டப்பாதையில் நுழைந்தது, சந்திரயான்-2
Published on

பெங்களூரு,

உலகின் வல்லரசு நாடுகள்கூட இதுவரை ஆராய்ந்து அறிந்திராத நிலவின் தென் துருவப்பகுதியை ஆராய்ந்து அறிய வேண்டும் என்பது இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு, இஸ்ரோவின் கனவு.

அந்த கனவை நனவாக்குவதற்காக உருவாக்கிய விண்கலம், சந்திரயான்-2.

3,850 கிலோ எடை கொண்ட சந்திரயான்-2 விண்கலத்தில் ஒரு ஆர்பிட்டரும், விக்ரம் என்ற லேண்டரும், பிரக்யான் என்ற ரோவரும் உண்டு.

கடந்த மாதம் 22-ந்தேதி பகல் 2.43 மணிக்கு, ஜி.எஸ். எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் சந்திரயான்-2 விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com