

பாட்னா,
பீகார் மாநிலத்தில் முக்கிய அரசியல் கட்சியாக ராஷ்டிரிய ஜனதா தளம் திகழ்கிறது. லாலு பிரசாத் தொடங்கிய இக்கட்சியை தற்போது அவரது மகன் தேஜஸ்வி தலைமை தாங்கி நடத்தி வருகிறார்.
இதனிடையே, ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் செய்தித்தொடர்பாளராக மைரித்திஜெய் திவாரி செயல்பட்டு வந்தார். அவர் கடந்த 16ம் தேதி கட்சியில் இருந்து ராஜினாமா செய்தார். கட்சியில் தனக்கு உரிய மரியாதை இல்லை எனக்கூறி ராஜினாமா செய்தார்.
இந்நிலையில், மைரித்திஜெய் திவாரி இன்று பாஜகவில் இணைந்தார். பாஜக மாநில தலைவர் சஞ்சய் சரோகி முன்னிலையில் மைரித்திஜெய் திவாரி இன்று பாஜகவில் இணைந்தார் .