

பெங்களூரு,
கர்நாடக துணை முதல்-மந்திரியும், உயர்கல்வித்துறை மந்திரியுமான அஸ்வத் நாராயண் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
பொது நுழைவு தேர்வில் கலந்து கொள்ள கர்நாடக மாணவர்கள் ஆன்லைன் மூலம் 9-ந் தேதிக்குள் (நேற்று) விண்ணப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
ஆனால் மாணவர்கள், பெற்றோரின் வேண்டுகோளை ஏற்று ஆன்லைன் மூலம் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் காலக்கெடு வருகிற 16-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது விளையாட்டு சான்றிதழ்கள், தேசிய மாணவர் படை சான்றிதழ் இருந்தால் அதையும் சேர்த்து மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.