காஷ்மீர் தாக்குதல்: பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் - ராகுல் காந்தி

கோப்புப்படம்
பயங்கரவாத தாக்குதல் குறித்து உள்துறை மந்திரி அமித் ஷாவிடம் பேசியதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி தனது எக்ஸ்வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
கொடூரமான பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்து உள்துறை மந்திரி அமித் ஷா, ஜம்மு காஷ்மீர் முதல்-மந்திரி உமர் அப்துல்லா மற்றும் ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் தலைவர் தாரிக் கர்ரா ஆகியோருடன் பேசினேன். நிலைமை குறித்த தற்போதைய விவரங்களை பெற்றேன்.
பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும், அவர்களுக்கு எங்கள் முழு ஆதரவும் உண்டு
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story






