உரம் வாங்க 2 நாள் வரிசையில் காத்து நின்ற விவசாயி மாரடைப்பால் உயிரிழப்பு

உத்தரபிரதேசத்தில் உரம் வாங்க 2 நாள் வரிசையில் நின்ற விவசாயி மயங்கி சரிந்தார். அவரை பரிசோதித்த டாக்டர்கள், விவசாயி போகிலால் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
உரம் வாங்க 2 நாள் வரிசையில் காத்து நின்ற விவசாயி மாரடைப்பால் உயிரிழப்பு
Published on

உத்தரபிரதேசத்தில் உரத்தட்டுப்பாடு கடுமையாக உள்ளது. இதனால் உரக்கடைகளில் விவசாயிகள் பல மணி நேரம் காத்திருந்து உரம் வாங்கி செல்கின்றனர். இதனால் உரக்கடைகளில் நீண்ட வரிசை காணப்படுகிறது.அந்தவகையில் லலித்பூர் மாவட்டத்தை சேர்ந்த போகிலால் பால் (வயது 55) என்ற விவசாயி அங்குள்ள ஜக்லான் பகுதியில் உள்ள உரக்கடையில் உரம் வாங்குவதற்காக நேற்று முன்தினம் சென்றார். அங்கு நீண்ட வரிசை காணப்பட்டது.

இதனால் நேற்று முன்தினம் அவரால் உரம் வாங்க முடியவில்லை. எனேவ இரவில் கடைக்கு வெளியிலேயே தூங்கினார். பின்னர் நேற்று மீண்டும் வரிசையில் நின்றார்.காலை 9.30 மணியளவில் திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் அங்கேயே அவர் மயங்கி சரிந்தார். உடனடியாக அவரை அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், விவசாயி போகிலால் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இந்த விவகாரம் தொடர்பாக மாநில அரசை சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் கடுமையாக சாடியுள்ளார். சுதந்திர இந்திய வரலாற்றில் இதுபோன்ற துயரங்கள் மற்றும் அவமானங்களை விவசாயிகள் ஒருபோதும் அனுபவிக்கவில்லை என அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com