நாங்கள் இன்னும் வலுவாகப்போகிறோம்; டெல்லியில் போராடும் விவசாயிகள்

மத்திய பா.ஜ.க. அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போர்க்கொடி உயர்த்தி வருகின்றனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

புதுடெல்லி,

மத்திய பா.ஜ.க. அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போர்க்கொடி உயர்த்தி வருகின்றனர். இந்த சட்டங்கள் குறைந்தபட்ச ஆதரவு விலைமுறையை ஒழித்துக்கட்டுவதுடன், தங்களை கார்ப்பரேட் நிறுவனங்களின் பின்னால் கையேந்தி நிற்கச்செய்து விடும் என கூறி, அவற்றை வாபஸ் பெற வலியுறுத்தி டெல்லியின் எல்லைகளை முற்றுகையிட்டு விவசாயிகள் போராடி வருகிறார்கள்.

இந்த போராட்டத்தை வாபஸ் பெறச்செய்வதற்காக மத்திய அரசு பல சுற்று பேச்சு நடத்தியும், அவை வெற்றி பெறவில்லை. இந்த நிலையில் இப்போராட்டம் இன்று 100-வது நாளை கடந்துள்ளது.

இதையொட்டி விவசாயிகள் அமைப்பினர் கருத்து தெரிவித்தனர். அப்போது அவர்கள், இந்த போராட்ட இயக்கம் முடிவு பெறுவதற்கு வெகு தொலைவில் உள்ளது. நாங்கள் இன்னும் வலுவாகப்போகிறோம். இந்த நீண்ட போராட்டம் ஒற்றுமையின் செய்தியை விடுத்துள்ளது என குறிப்பிட்டார்கள்.

போராடும் விவசாயிகள் கூட்டமைப்பின் ராகேஷ் திகாய்த் கூறுகையில், நாங்கள் போராடுவதற்கு தயாராக இருக்கிறோம். அரசாங்கம் எங்கள் கோரிக்கைகளை கவனித்து நிறைவேற்றுகிறவரை நாங்கள் இங்கிருந்து நகரப்போவது இல்லை என குறிப்பிட்டார்.

அகில இந்திய கிஷான் சங்கார்ஷ் ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்த கவிதா குருகாந்தி கருத்து தெரிவிக்கையில், இந்த போராட்டம் சமூக அளவில் ஆக்கப்பூர்வமானது என்பதை நிரூபித்து காட்டி உள்ளது. பெண் விவசாயிகளின் அடையாளத்தை வலுப்படுத்தி உள்ளது. அவர்கள் தங்கள் இருப்பையும், பங்களிப்பையும் செய்ய வைத்திருக்கிறது. பெண் விவசாயிகளை விவசாயிகள் என அங்கீகரிக்க வைத்துள்ளது என கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com