அமிதாப்பச்சனுக்கு காய்ச்சல்: தேசிய விருது விழாவில் பங்கேற்க முடியாமல் தவிப்பு

அமிதாப்பச்சனுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதால், தேசிய விருது விழாவில் பங்கேற்க முடியாமல் தவித்து வருகிறார்.
அமிதாப்பச்சனுக்கு காய்ச்சல்: தேசிய விருது விழாவில் பங்கேற்க முடியாமல் தவிப்பு
Published on

மும்பை,

2018-ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் இன்று (திங்கட்கிழமை) டெல்லியில் வழங்கப்படுகிறது. இதில், சினிமா துறையில் பல்வேறு சாதனைகளை படைத்ததற்காக இந்தி திரையுலக ஜாம்பவான் அமிதாப்பச்சனுக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் அமிதாப்பச்சனுக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டு உள்ளது. இதனால் அவர் இன்றைய விருது விழாவில் பங்கேற்க முடியாது என அறிவித்து உள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில் கூறுகையில், கடுமையான காய்ச்சல் காரணமாக பயணம் செய்ய டாக்டர்கள் அனுமதிக்கவில்லை. எனவே நாளை (இன்று) டெல்லியில் நடைபெறும் தேசிய விருது வழங்கும் விழாவில் பங்கேற்க முடியாது. இது துரதிர்ஷ்டவசமானது. எனது வருத்தங்கள் என்று குறிப்பிட்டு இருந்தார்.

இந்திய திரையுலகில் வழங்கப்படும் மிகப்பெரும் விருது, தாதா சாகேப் பால்கே விருது ஆகும். இது, ஒரு தங்க தாமரை பதக்கம், ஒரு சால்வை மற்றும் ரூ.10 லட்சம் ரொக்கம் ஆகியவை அடங்கியதாகும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com