கொல்கத்தா சர்வதேச விமான நிலையத்தில் திடீர் தீ விபத்து..!!

கொல்கத்தா நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
கொல்கத்தா சர்வதேச விமான நிலையத்தில் திடீர் தீ விபத்து..!!
Published on

கொல்கத்தா,

கொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையத்தில் இன்று இரவு 9 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. விமான நிலையத்தின் 3C புறப்பாடு முனைய கட்டிடத்தின் செக்-இன் கவுண்டரில் தீ விபத்து ஏற்பட்டது.

தகவல் அறிந்து விரைந்து வந்த எட்டு தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீ முழுமையாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இதுவரை யாருக்கும் எந்தவிதமான பாதிப்பும் ஏற்பட்டதாக தகவல் வெளியாகவில்லை.

சமூக ஊடகங்களில் வெளியான காட்சிகளில் செக்-இன் பகுதியில் கடுமையான தீ விபத்தின் ஒரு பகுதியைக் காட்டின. விமான நிலைய அதிகாரிகள் முனையத்தில் இருந்து மக்களை பாதுகாப்பாக வெளியேற்றினர்.

இதுதொடர்பாக செய்தி நிறுவனங்கள் வெளியிட்ட தகவல்படி, "டி போர்டல் செக்-இன் கவுண்டரில் தீ விபத்து ஏற்பட்டது. புகை மூட்டத்தால், பயணிகள் மற்றும் ஊழியர்கள் முனைய கட்டிடத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. தீ அணைக்கப்பட்டுள்ளது. இயல்பான செயல்பாடு திரும்பி உள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே செக்-இன் மற்றும் விமானங்கள் செயல்பாடு இரவு 10.15 மணிக்கு மீண்டும் தொடங்கும் என்று கொல்கத்தா விமான நிலையம் தனது டுவிட்டரில் தெரிவித்திருந்தது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com