கேரள மாநிலத்திற்கான முதல் ஆக்சிஜன் ரெயில் வந்து சேர்ந்தது

கேரள மாநிலத்திற்கு 118 மெட்ரிக் டன் ஆக்சிஜனுடன் முதல் ஆக்சிஜன் ரெயில் வந்து சேர்ந்தது.
கேரள மாநிலத்திற்கான முதல் ஆக்சிஜன் ரெயில் வந்து சேர்ந்தது
Published on

சென்னை,

கொரோனாவால் எழுந்துள்ள ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்வதற்கு ரெயில்வேயும் களத்தில் இறங்கி இருக்கிறது. ஆக்சிஜன் உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து, ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் சிறப்பு ரெயில்கள் மூலம் பல்வேறு மாநிலங்களுக்கு ஆக்சிஜன் டேங்கர்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன.

இதில் கடந்த மாதம் 19-ந்தேதி முதல் நேற்று வரை 139 ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் தங்கள் பயணத்தை முடித்திருப்பதாகவும், இதில் 540 டேங்கர்களில் ஆக்சிஜன் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும் ரெயில்வே கூறியுள்ளது. இதுவரை 13 மாநிலங்களுக்கு 8,700 டன் மருத்துவ ஆக்சிஜனை அனுப்பியிருப்பதாக ரெயில்வே குறிப்பிட்டு உள்ளது.

அந்த வகையில் கேரள மாநிலத்திற்கான முதல் ஆக்சிஜன் எக்பிரஸ் ரெயில், 118 மெட்ரிக் டன் ஆக்சிஜனுடன் 10 டேங்கர்களில் ஒடிசா மாநிலத்தில் இருந்து நேற்று புறப்பட்டது. இந்த ஆக்சிஜன் ரெயிலானது இன்று அதிகாலை கேரள மாநிலம் எர்னாகுளத்திற்கு வந்து சேர்ந்ததாக ரெயில்வே அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com