டெல்லியில் ஏற்பட்ட வன்முறை சம்பவத்திற்கு காவல்துறையின் மெத்தன போக்கே காரணம்- சுப்ரீம் கோர்ட்

டெல்லியில் ஏற்பட்ட வன்முறை சம்பவத்திற்கு காவல்துறையின் மெத்தனப் போக்கே காரணம் என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
டெல்லியில் ஏற்பட்ட வன்முறை சம்பவத்திற்கு காவல்துறையின் மெத்தன போக்கே காரணம்- சுப்ரீம் கோர்ட்
Published on

புதுடெல்லி

டெல்லி வன்முறை தொடர்பான வழக்கின் விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் இன்று நடைபெற்றது.

வன்முறையின் போது உடனடி நடவடிக்கை எடுக்காமல், எதற்காக காத்திருக்க வேண்டும். ஏன் இந்த அளவிற்கு நிலைமையை கைமீறி போக விட்டீர்கள்.

காவல் துறையின் மெத்தனப் போக்கால் தான் பிரச்சினை பெரிதானது. டெல்லி கலவரம் துரதிருஷ்டவசமானது, வேதனை அளிக்கிறது என நீதிபதி கே.எம்.ஜோசப் காவல்துறை மீது அதிருப்தி வெளியிட்டார்.

வன்முறை தொடர்பான வழக்குக்கும், ஷாகின் பாக் போராட்டத்திற்கும் தொடர்பில்லை. வன்முறை வழக்கை டெல்லி ஐகோர்ட் விசாரித்து வருகிறது! என அரசு தரப்பு விளக்கம் அளித்தது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com