அகிலேஷ் யாதவ் மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி

அகிலேஷ் யாதவ் மனைவி டிம்பிள் யாதவிற்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
அகிலேஷ் யாதவ் மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி
Published on

லக்னோ,

சமாஜ்வாதி கட்சி தலைவரும், உத்தரபிரதேச முன்னாள் முதல் மந்திரியுமானவர் அகிலேஷ் யாதவ். இவரின் மனைவி டிம்பிள் யாதவ் (வயது 43). முன்னாள் எம்.பி.யான டிம்பிள் யாதவ் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களும் செலுத்திக்கொண்டுள்ளார்.

இந்நிலையில், டிம்பிள் யாதவிற்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக டிம்பிள் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், நான் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் போட்டுள்ளேன். எனக்கு அறிகுறியற்ற கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நான் என்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளேன்... என்னுடன் சமீபத்தில் தொடர்பில் இருந்த அனைவரும் கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com