பா.ஜ.க.,வில் இணைந்த உத்தர பிரதேச முன்னாள் டி.ஜி.பி.

காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சிகளை சேர்ந்த பிரமுகர்களும் பா.ஜ.க.,வில் இணைந்தனர்.
பா.ஜ.க.,வில் இணைந்த உத்தர பிரதேச முன்னாள் டி.ஜி.பி.
Published on

லக்னோ,

உத்தரப் பிரதேச மாநிலத்தின் முன்னாள் டி.ஜி.பி. விஜய் குமார், பாரதிய ஜனதா கட்சியில் இன்று காலை இணைந்தார். உத்தரப் பிரதேச மாநில டிஜிபியாக பணியாற்றி கடந்த ஜனவரி மாதம் பணியில் இருந்து ஓய்வுபெற்ற விஜய் குமாருடன், அவரது மனைவியும் பா.ஜ.க.,வில் இணைந்துள்ளார். உ.பி. துணை முதல்-மந்திரி பிரஜேஷ் பதக் முன்னிலையில் காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சிகளை சேர்ந்த பிரமுகர்களும் இணைந்தனர்.

பா.ஜ.க.,வில் இணைந்த பிறகு செய்தியாளர்களுடன் விஜய் குமார் பேசுகையில், பா.ஜ.க.,வின் கொள்கைகளால் நான் ஈர்க்கப்பட்டேன். மக்களுக்காக பணியாற்றுவதற்கு இங்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு மேம்பட்டுள்ளது என்றார்.

கடந்த மாதம் கொல்கத்தா ஐகோர்ட்டு நீதிபதி அபிஜீத் கங்கோபாத்யாய தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு பா.ஜ.க.,வில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com