சட்டவிரோத பட்டாசு ஆலையில் வெடிவிபத்து - 4 பேர் பலி

சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.
சட்டவிரோத பட்டாசு ஆலையில் வெடிவிபத்து - 4 பேர் பலி
Published on

கொல்கத்தா,

மேற்குவங்காள மாநிலம் நதியா மாவட்டம் ரதலா பகுதியில் அனுமதியின்றி சட்டவிரோத பட்டாசு ஆலை செயல்பட்டு வந்தது. இந்த ஆலையில் அப்பகுதியை சேர்ந்த பெண்கள் வேலை செய்து வந்தனர்.

இந்நிலையில், இந்த பட்டாசு ஆலையில் இன்று பட்டாசு தயாரிக்கும் பணியில் 5 பெண்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்தில் பட்டாசு ஆலை நிலைகுலைந்தது. தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர் பட்டாசு ஆலையில் சிக்கியவர்களை மீட்கும்பணியில் இறங்கினர். ஆனால், இந்த வெடிவிபத்தில் 4 பெண்கள் உயிரிழந்தனர். மேலும், ஒருவர் படுகாயமடைந்தார். படுகாயமடைந்தவரை மீட்டு சிகிச்சைக்கு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களில் குடும்பத்திற்கு தலா ரூ. 2 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என மாநில அரசு தெரிவித்துள்ளது.  

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com