மேற்கு வங்காளம்: பட்டாசு ஆலையில் வெடி விபத்து - 4 பேர் படுகாயம்

வெடி விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேற்கு வங்காளம்: பட்டாசு ஆலையில் வெடி விபத்து - 4 பேர் படுகாயம்
Published on

கொல்கத்தா,

மேற்கு வங்காள மாநிலம் தெற்கு பர்கானஸ் மாவட்டம் சம்பஹிதி கிராமத்தில் பட்டாசு ஆலை உள்ளது. இந்த பட்டாசு ஆலையில் இன்று மதியம் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.

இந்த வெடி விபத்து பட்டாசு ஆலையில் வேலை செய்துகொண்டிருந்த 4 பேர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து விரைந்து சென்ற தீயணைப்புத்துறையினர், போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். மேலும், இந்த வெடி விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com