

புதுடெல்லி,
பாதுகாப்பு கருதி டெல்லி மாநகர அரசு பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்று அம்மாநில முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் சமீபத்தில் அறிவித்தார். வருகிற அக்டோபர் மாதம் 29-ந்தேதி முதல் இந்த இலவச பயண திட்டம் அமலுக்கு வருகிறது.
இதற்கிடையே கெஜ்ரிவால் தலைமையில் நேற்று நடந்த மந்திரி சபை கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.