ஆந்திராவில் 74 சதவீத அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம்

மொத்தம் 74 சதவீத அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம் கிடைக்கும்.
ஐதராபாத்,
ஆந்திராவில் ஆகஸ்டு 15-ந்தேதி முதல் பெண்களுக்கு இலவச பஸ் பயண திட்டம் அமலுக்கு வருகிறது. இதுகுறித்து ஆந்திர மாநில அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் துவாரகை திருமலை ராவ் கூறியதாவது:-
"பெண்கள் இலவச பஸ் பயணத்திற்க்காக ஏற்கனவே 750 புதிய பஸ்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்திற்காக மாநிலம் முழுவதும் 3,500 புதிய பஸ்கள் இயக்கபட உள்ளது. மொத்தம் 74 சதவீத அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம் கிடைக்கும். அடுத்த 2 மாதங்களில் ஒவ்வொரு பஸ் நிலையத்திலும் குடிநீர் வசதிகள், நாற்காலிகள் மற்றும் மின்விசிறிகள் நிறுவப்படும். பயணிகளின் எண்ணிக்கையைப் பொறுத்து கிராமப்புற பஸ் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். அடுத்த மாத இறுதிக்குள் அனைத்து போக்குவரத்து ஊழியர்களும் பதவி உயர்வு பெறுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story






