ஆந்திராவில் இருந்து இறைச்சிக்காக 20 மாடுகள் கடத்தல்; கோலாரை சேர்ந்த 3 பேர் கைது

ஆந்திராவில் இருந்து இறைச்சிக்காக 20 மாடுகள் கடத்திய கோலாரை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
ஆந்திராவில் இருந்து இறைச்சிக்காக 20 மாடுகள் கடத்தல்; கோலாரை சேர்ந்த 3 பேர் கைது
Published on

கோலார் தங்கவயல்;

கோலார் டவுன் ரஹ்மத் நகரை சேர்ந்தவர் ஆரீப். இவர் தனது கொட்டகையில் 20-க்கும் மேற்பட்ட மாடுகளை கட்டி இருந்தார். அவர் ஆந்திராவில் இருந்து மாடுகளை கடத்தி வந்து கட்டி வைத்திருப்பதாக கல்பேட்டை போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். அப்போது ஆரீப்பிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், ஆரீப், தனது நண்பர்களான ஷேக் முகமது, ஷரீப் ஆகியோருடன் சேர்ந்து ஆந்திராவில் இருந்து மாடுகளை இறைச்சிக்காக கடத்தி வந்ததும், அவற்றை விற்று லாபம் சம்பாதித்ததும் தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் கொட்டகையில் கட்டி இருந்த 20 மாடுகளை மீட்டு கோசாலைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com