மே 1-ம் தேதி முதல் ஏடிஎம் மூலம் 3 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ரூ.23 கூடுதல் கட்டணம் வசூலிப்பு

ஏடிஎம்களை அடிக்கடி பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் இந்த மாற்றத்தால் பாதிக்கப்படுவார்கள்.
மே 1-ம் தேதி முதல் ஏடிஎம் மூலம் 3 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ரூ.23 கூடுதல் கட்டணம் வசூலிப்பு
Published on

புது டெல்லி,

அரசாங்கம் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை முறையாக தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது, இது ரொக்க அடிப்படையிலான பணத்தை சார்ந்திருப்பதை மேலும் குறைக்கிறது.

பல வங்கிகள் மாதத்திற்கு மூன்று முதல் ஐந்து முறை ஏடிஎம் மூலம் பணம் எடுக்கும் பலனை வழங்குகின்றன. இது தவிர மற்ற வங்கிகளின் ஏடிஎம்களில் மாதம் மூன்று முறை பணம் எடுக்கலாம். கூடுதல் பரிவர்த்தனைகளுக்கு ரூ.21 கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்தியாவில் புதிய வங்கி விதிகள் நடைமுறைக்கு வரவுள்ளன. இதில் முக்கியமாக மே 1-ம் தேதி முதல் ஏடிஎம் மூலம் 3 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ரூ.23 கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது. ஏற்கனவே ரூ.21 வசூலிக்கப்பட்ட நிலையில் ரூ.23 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

ஏடிஎம்களை அடிக்கடி பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் இந்த மாற்றத்தால் பாதிக்கப்படுவார்கள், இது பணம் எடுக்கும் செலவை அதிகரிக்கும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com