மராட்டியத்தில் விநாயகர் சிலை கரைப்பின் போது தண்ணீரில் மூழ்கி 18 பேர் உயிரிழப்பு

மராட்டியத்தில் விநாயகர் சிலை கரைப்பின் போது தண்ணீரில் மூழ்கி 18 பேர் உயிரிழந்தனர்.
மராட்டியத்தில் விநாயகர் சிலை கரைப்பின் போது தண்ணீரில் மூழ்கி 18 பேர் உயிரிழப்பு
Published on

மும்பை,

மராட்டியத்தில் விநாயகர் சதுர்த்தியையொட்டி பொது இடங்களில் பிரமாண்ட விநாயகர் சிலைகள் நிறுவப்பட்டு 10 நாட்கள் வழிபாடு நடத்தப்பட்டது. நேற்று சிலை கரைப்பு தினமான ஆனந்த சதுர்த்தி கொண்டாடப்பட்டது. இதையொட்டி விநாயகர் சிலைகள் நீர்நிலைகளுக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கரைக்கப்பட்டன. மாநிலத்தின் பல்வேறு இடங்களில் சிலை கரைப்பின் போது தண்ணீரில் மூழ்கி 18 பேர் உயிரிழந்து உள்ளனர் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com