

புதுடெல்லி
சுதந்திரத்திற்குப் பின்னர் இந்திய இராணுவத்தின் 28-வது தளபதியாக ஜெனரல் மனோஜ் முகுந்த் நராவனே இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். மனோஜ் முகுந்த் நராவனேவிடம் பிபின் ராவத் தனது பொறுப்புகளை ஒப்படைத்தார்.
லெப்டினென்ட் ஜெனரல் நராவனே ஜம்மு-காஷ்மீரில் பட்டாலியனில் பணியாற்றியதற்காக சிறப்புமிக்க சேனா பதக்கம் வழங்கப்பட்டுள்ளது. நாகாலாந்தில் அசாம் ரைபிள்ஸ் (வடக்கு) அவரது சேவைகளுக்காக விஷிஷ் சேவா பதக்கம் வழங்கப்பட்டு உள்ளது.
இராணுவ பயிற்சி கமெண்ட்டில் ஜி.ஓ.சி-இன்-சி என்ற சிறப்பான சேவைகளுக்காக லெப்டினென்ட் ஜெனரல் நராவனேவுக்கு பரம் விஷித் சேவா பதக்கம் வழங்கப்பட்டு உள்ளது.