ஜார்ஜ் பெர்னாண்டஸ் கடந்து வந்த பாதை பாதிரியாராக வேண்டியவர் நாட்டை பாதுகாக்கும் ராணுவ மந்திரியாக உயர்ந்தார்

மரணம் இந்தத் தலைவரை அரவணைத்துக்கொண்டாலும், இவரது நினைவுகள் சக அரசியல் தலைவர்களிடமும், சோசலிசவாதிகளிடமும், தொழிற்சங்கவாதிகளிடமும், ஏன் பொது மக்களிடமும்கூட பசுமையாக என்றென்றும் நிலைத்திருக்கும்.
ஜார்ஜ் பெர்னாண்டஸ் கடந்து வந்த பாதை பாதிரியாராக வேண்டியவர் நாட்டை பாதுகாக்கும் ராணுவ மந்திரியாக உயர்ந்தார்
Published on

புதுடெல்லி,

அவரது வாழ்க்கைப்பாதை, கரடு முரடானது என்று சொன்னால் அது உண்மைதான். ஆரம்பத்தில் ஜார்ஜ் மேத்யூ பெர்னாண்டஸ் என்னும் தங்கள் செல்ல மகன், கத்தோலிக்க பாதிரியாராக வேண்டும் என்பதுதான் அவரது பெற்றோரான ஜான் ஜோசப் பெர்னாண்டஸ், ஆலிஸ் மார்த்தாவின் கனவாக இருந்தது.

கடைசி வரை அவருக்கு உற்ற துணையாக இருந்தவர் ஜெயா ஜெட்லி.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஆங்கிலம் என 10 மொழிகளில் பேசி அசத்தும் ஜார்ஜ் பெர்னாண்டஸ் இப்போது மவுனமாகி விட்டார். மரணம் அவரை அரவணைத்துக்கொண்டு விட்டது.

ஆனாலும் என்ன, இந்திய அரசியல் வரலாற்றில் ஜார்ஜ் பெர்னாண்டஸ் என்ற பெயர் ஒலித்துக்கொண்டுதான் இருக்கும்.

X

Daily Thanthi
www.dailythanthi.com