கேரளாவில் மாநில அரசின் செயல்பாட்டில் தலையிடவில்லை - கேரள கவர்னர்

இடதுசாரிக் கட்சிகள் இன்று கேரள ராஜ்பவனுக்கு மாபெரும் கண்டன பேரணியை நடத்தின.
கேரளாவில் மாநில அரசின் செயல்பாட்டில் தலையிடவில்லை - கேரள கவர்னர்
Published on

புதுடெல்லி,

கேரள உயர்கல்வித்துறையில் கவர்னர் தலையிடுவதாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து, ஆளும் இடதுசாரிக் கட்சிகள் இன்று திருவனந்தபுரத்தில் உள்ள ராஜ்பவனுக்கு மாபெரும் கண்டன பேரணியை நடத்தின. முன்னதாக, ராஜ்பவனுக்கு இடதுசாரி கட்சிகள் ஏற்பாடு செய்திருந்த பேரணியை நிறுத்த உத்தரவிட முடியாது என கேரள ஐகோர்ட்டு மறுத்துவிட்டது.

இந்த நிலையில், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய கேரள கவர்னர் ஆரிப் முகமது கான், கேரள அரசு மீது பல கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அவர் கூறியதாவது:-

"அரசாங்கத்தின் வேலையில் நான் தலையிட முயற்சித்ததற்கு ஒரு உதாரணம் சொல்லுங்கள், அந்த நேரத்தில் நான் ராஜினாமா செய்வேன். பல்கலைக்கழகங்களின் அன்றாட செயல்பாட்டில் அரசாங்கம் தலையிட்டதற்கு 1001 உதாரணங்களை என்னால் கொடுக்க முடியும். நான் அழுத்தங்களுக்கு அடிபணியும் நபர் அல்ல.

கடந்த ஆண்டு வரை நீங்கள் ஏன் இந்த பிரச்சினையை எழுப்பவில்லை.கேரளாவில் 13 பல்கலைக்கழகங்கள் இருந்தன, அங்கு அனைத்து நியமனங்களும் சட்டவிரோதமானது? சட்டத்தை மீறி 100% பணிநியமனங்கள் நடந்த மாநிலம் வேறு ஏதேனும் உள்ளதா? பல்கலைக் கழகங்கள் கட்சித் தொண்டர்கள் மற்றும் அவர்களது உறவினர்களின் ஏகாதிபத்தியமாக மாறிவிட்டன" என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com