சிவமொக்காவில் தொழிலாளியிடம் கத்தி முனையில் தங்கச்சங்கிலி, பணம் பறிப்பு; 4 பேருக்கு வலைவீச்சு

சிவமொக்காவில் தொழிலாளியிடம் கத்தி முனையில் தங்கச்சங்கிலி, பணம் பறித்த 4 பேருக்கு போலீசார் வலைவீச்சி தேடிவருகின்றனர்.
சிவமொக்காவில் தொழிலாளியிடம் கத்தி முனையில் தங்கச்சங்கிலி, பணம் பறிப்பு; 4 பேருக்கு வலைவீச்சு
Published on

சிவமொக்கா;

சிவமொக்கா (மாவட்டம்) டவுன் பகுதியில் வசித்து வருபவர் விஜயகுமார். இவர் அதே பகுதியில் உள்ள தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். இவர் தினமும் வேலையை முடித்துவிட்டு தனது மோட்டார் சைக்கிளில் செல்வது வழக்கம். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் வேலைக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

சிவமொக்கா ரெயில் நிலையம் அருகே சென்றபோது மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் 4 பேர் அவரை வழிமறித்தனர். பின்னர், அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் மிரட்டி, விஜயகுமார் அணிந்திருந்த தங்கச்சங்கிலி மற்றும் பணம் ஆகியவற்றை பறித்தனர்.

மேலும் அந்த கும்பல் தங்கள் செல்போனுக்கு ஆன்லைன் பணப்பரிவர்த்தனை மூலம் பணம் அனுப்புமாறு கூறி மிரட்டியுள்ளனர். இதனால் பயந்துபோன விஜயகுமார் அவர்கள் கேட்ட பணத்தை அனுப்பியுள்ளார்.

இதையடுத்து மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து விஜயகுமார் கொடுத்த புகாரின் பேரில் ஜெயநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேரை வலைவீசி தேடிவருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com