

பண்டாரா,
மராட்டிய மாநிலம் பண்டாரா மாவட்டத்தில் பண்டாரா மாவட்ட பொது மருத்துவமனை ஒன்று உள்ளது. இந்நிலையில், இன்று அதிகாலை 2 மணியளவில் திடீரென குழந்தைகள் சிகிச்சை பிரிவில் தீ விபத்து ஏற்பட்டு உள்ளது.
இந்த சம்பவத்தில் 10 குழந்தைகள் உயிரிழந்து உள்ளனர். இதுபற்றி அந்த மருத்துவமனையின் அறுவை சிகிச்சை மருத்துவர் பிரமோத் கன்டேட் கூறும்பொழுது, அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் இருந்து 7 குழந்தைகளை மீட்டு உள்ளோம். அவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறோம் என கூறியுள்ளார்.