‘ஒமிக்ரான்’ வைரஸ்: ஆப்ரிக்க நாடுகளுக்கு உதவி செய்ய இந்தியா தயாராக உள்ளது - வெளியுறவு அமைச்சகம் அறிவிப்பு

ஒமிக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்ரிக்க நாடுகளுக்கு உதவி செய்ய இந்தியா தயாராக உள்ளது என வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.
‘ஒமிக்ரான்’ வைரஸ்: ஆப்ரிக்க நாடுகளுக்கு உதவி செய்ய இந்தியா தயாராக உள்ளது - வெளியுறவு அமைச்சகம் அறிவிப்பு
Published on

புதுடெல்லி,

ஒமிக்ரான் கொரோனா வைரஸ் குறித்து உலகமே அச்சத்தில் உள்ளது. தென் ஆப்பிரிக்காவில் முதன் முதலாக கண்டறியப்பட்டுள்ள இந்த வகை கொரோனா ஐரோப்பிய நாடுகளிலும் வேகமாக கால் பதித்து வருகிறது. ஒமிக்ரான் பரவலால் தென் ஆப்பிரிக்காவில் வேகமாக கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், ஒமிக்ரான் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்ரிக்க நாடுகளுக்கு உதவி செய்ய இந்தியா தயாராக உள்ளது என வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியுறவு அமைச்சகம் கூறுகையில்,

ஒமிக்ரான் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட ஆப்பிரிக்க நாடுகளுக்கு உதவி செய்ய இந்திய அரசு தயாராக உள்ளது. அத்தியாவசிய உயிர்காக்கும் மருந்துகள், கொரோனா தடுப்பூசிகள், சோதனைக் கருவிகள், கையுறைகள், பிபிஇ கருவிகள் மற்றும் வென்டிலேட்டர்கள் போன்ற மருத்துவ உபகரணங்களைத் தேவைப்படும்போது வழங்கவும் இந்தியா தயாராக உள்ளது.

மேலும் மரபணு கண்காணிப்பு மற்றும் வைரஸ் தொடர்பான ஆராய்ச்சிப் பணிகளில் ஆப்பிரிக்க விஞ்ஞானிகளுடன் இந்திய நிறுவனங்கள் பணியாற்றுவது குறித்தும் பரிசீலிக்கப்படும் என வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com