பிரதமர் மோடியின் உணவுக்காக அரசு பணம் செலவழிக்கப்படவில்லை - ஆர்டிஐ

பிரதமர் மோடியின் உணவுக்காக அரசு பணம் செலவழிக்கப்படவில்லை என ஆர்டிஐ தகவலில் வெளியிடப்பட்டுள்ளது.
பிரதமர் மோடியின் உணவுக்காக அரசு பணம் செலவழிக்கப்படவில்லை - ஆர்டிஐ
Published on

புதுடெல்லி,

ஆர்டிஐ மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு பிரதமர் அலுவலகச் செயலாளர் பினோத் பிஹாரி சிங் ஆர்டிஐக்கு அளித்த பதில், பிரதமரின் உணவுக்காக அரசு பட்ஜெட்டில் இருந்து ஒரு ரூபாய் கூட செலவிடப்படவில்லை.

பிரதமரின் இல்லம் (பிஎம் ஆவாஸ்) மத்திய பொதுப்பணித் துறையால் பாதுகாக்கப்படுகிறது. அதே சமயம் வாகனங்களின் பொறுப்பு எஸ்பிஜியிடம் உள்ளது என்று கூறினார். அதுமட்டுமல்லாமல், நாடாளுமன்றத்தில் இயங்கும் கேன்டீன் தொடர்பாக தற்போதைய அரசு பல சீர்திருத்தங்களை செய்துள்ளது.

மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஜனவரி 19, 2021 அன்று நாடாளுமன்ற கேண்டீனில் எம்பிக்களுக்கு வழங்கப்பட்டு வந்த மானியத்தை ரத்து செய்தார். 2021ஆம் ஆண்டுக்கு முன், பார்லிமென்ட் கேன்டீன்களில் ரூ.17 கோடி மானியமாக செலவிடப்பட்டது என்று பிரதமர் அலுவலகம் (பிஎம்ஓ) இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com