

லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் சோன்பத்ரா மாவட்டத்தில் அரசு ஆரம்பப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பணியாற்றி வந்த ஆசிரியர் அங்கு கல்வி கற்று வரும் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
ஆரம்பப்பள்ளியில் 1 முதல் 3ம் வகுப்பு வரை படிக்கும் சிறுமிகளுக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இது குறித்து அறிந்த அப்பகுதி மக்கள் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், பள்ளிச்சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட ஆசிரியரின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை.