ஜனாதிபதியுடன் குஜராத் முதல் மந்திரி சந்திப்பு

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை குஜராத் முதல் மந்திரி பூபேந்திர படேல் சந்தித்துப் பேசினார்.
ஜனாதிபதியுடன் குஜராத் முதல் மந்திரி சந்திப்பு
Published on

புதுடெல்லி,

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை குஜராத் முதல் மந்திரி பூபேந்திர படேல் இன்று நேரில் சந்தித்துப் பேசினார். குஜராத் மாநில முதல் மந்திரியாக இருந்த விஜய் ரூபானி தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில் செப்டம்பர் 13ஆம் தேதி புதிய முதல் மந்திரியாக பூபேந்திர படேல் பதவியேறுக்கொண்டார்.

இந்நிலையில், பதவியேற்ற பின் முதல்முறையாக டெல்லி சென்றுள்ள குஜராத் முதல் மந்திரி இன்று காலை ஜனாதிபதியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.இதனைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து சந்தித்தார். மேலும், பாஜகவின் முக்கிய தலைவர்களையும் பூபேந்திர படேல் சந்திக்கவுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com