

ஜாம்நகர்
பிரதமர் மோடி குஜராத்தின் ஜாம்நகர் பகுதியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். இதன்பின்னர் அவர் நிகழ்ச்சியில் பேசும்போது, வளர்ச்சியை நோக்கி குஜராத் மிக பெரிய அடியை எடுத்து வைத்திருக்கிறது.
ஒரு காலத்தில் உப்பு தவிர்த்து வேறு எதுவும் குஜராத்தில் உற்பத்தியாகவில்லை. அந்த குஜராத்தில் இன்று, அரை கடத்தி சிப்புகள், மெட்ரோ ரெயில் பெட்டிகள், நவீன ரெயில்களுக்கான என்ஜின்கள் தயாரிக்கப்படுகின்றன.
விமானம் தயாரிப்புக்காகவும் குஜராத் தயாராகி வருகிறது. சுற்றுச்சூழல் பாதிப்புகளால் உலகம் தள்ளாடி வரும் வேளையில், நம்முடைய நாட்டில் பருவநிலைக்கான அர்ப்பணிக்கப்பட்ட ஒரு துறையை முதன்முதலில் நிறுவிய மாநிலம் என்ற பெருமையை குஜராத் பெற்றுள்ளது என்று பேசினார்.