

புதுடெல்லி,
இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசநாயக்க, டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இரு நாடுகள் இடையேயான முன்னேற்றம் குறித்து இருவரும் விவாதித்தனர். இது தொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;
”இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசநாயக்கவுடனான சந்திப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. டெல்லியில் நடந்த சந்திப்பில் இந்தியா-இலங்கை இடையேயான முன்னேற்றம் தொடர்பாக பேசினோம். சுகாதாரம், எரிசக்தி, உட்கட்டமைப்பு உள்ளிட்ட பல துறைகளின் ஒத்துழைப்பு தொடர்பாகவும் உரையாடினோம்.”
இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.