ஏழைகள், விவசாயிகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்தவர் பிரகாஷ் சிங் பாதல்; அரியானா முதல்-மந்திரி புகழாரம்

ஏழைகள் மற்றும் விவசாயிகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தவர் பிரகாஷ் சிங் பாதல் என அரியானா முதல்-மந்திரி மனோகர் லால் கட்டார் கூறியுள்ளார்.
ஏழைகள், விவசாயிகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்தவர் பிரகாஷ் சிங் பாதல்; அரியானா முதல்-மந்திரி புகழாரம்
Published on

மொகாலி,

ஏழைகள் மற்றும் விவசாயிகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தவர் பிரகாஷ் சிங் பாதல் என அரியானா முதல்-மந்திரி மனோகர் லால் கட்டார் கூறியுள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் முதல்-மந்திரி மற்றும் அகாலி தளம் கட்சியின் மூத்த தலைவரான பிரகாஷ் சிங் பாதல் (வயது 95) சில நாட்களாக மூச்சுத்திணறலால் அவதிப்பட்டு வந்து உள்ளார். அவர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் மொகாலியில் உள்ள போர்டிஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக சேர்க்கப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்து உள்ளார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, மராட்டிய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பஞ்சாப் முன்னாள் முதல்-மந்திரியான பிரகாஷ் சிங் பாதல் மறைவை அடுத்து, 2 நாள் தேசிய துக்க தினம் கடைப்பிடிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்து உள்ளது.

அவரது மறைவை முன்னிட்டு அரியானா முதல்-மந்திரி மனோகர் லால் கட்டார் மொகாலியில் உள்ள போர்டிஸ் மருத்துவமனைக்கு நேரில் சென்றார். ஷிரோமணி அகாலி தள தலைவர் பிக்ரம் சிங் மஜித்தியாவும் இரங்கல் தெரிவிக்க மருத்துவமனைக்கு நேரில் சென்று உள்ளார்.

இதுபற்றி அரியானா முதல்-மந்திரி மனோகர் லால் கட்டார் செய்தியாளர்களிடம் கூறும்போது, பிரகாஷ் சிங் பாதல் தொலைநோக்கு கொண்ட தலைவர். ஏழைகள் மற்றும் விவசாயிகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தவர். பஞ்சாப்பின் முதல்-மந்திரியாக 20 ஆண்டுகளாக பதவி வகித்தவர். அவரது மறைவால், இன்று ஒரு சகாப்தம் முடிவுக்கு வந்து உள்ளது. அவருக்கு நான் அஞ்சலி செலுத்தியுள்ளேன் என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com