பீகாரில் கனமழை, வெள்ளம்: 10 லட்சம் பேர் பாதிப்பு

வட மாநிலங்களில் தென்கிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது.
பீகாரில் கனமழை, வெள்ளம்: 10 லட்சம் பேர் பாதிப்பு
Published on

பாட்னா,

பீகாரில் கனமழை, வெள்ளத்தால் 10 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வட மாநிலங்களில் தென்கிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக பீகாரில் பருவமழை தீவிரமடைந்து வருகிறது. நேபாளத்தை ஒட்டியுள்ள அம்மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது.

10 லட்சம் பேர் பாதிப்பு

இந்நிலையில், கனமழையால் கங்கை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கங்கை ஆற்றின் கிளை ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கால் பீகாரில் 11 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், நூற்றுக்கணக்கான கிராமங்களை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. மேலும், இந்த கனமழை, வெள்ளத்தால் அம்மாநிலத்தில் 10 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேவேளை, மீட்புப்பணியில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com