கர்நாடகாவில் கனமழைக்கு 12 பேர் பலி

கர்நாடகாவில் கனமழைக்கு 12 பேர் பலியாகியுள்ளனர்.
கர்நாடகாவில் கனமழைக்கு 12 பேர் பலி
Published on

பெங்களூரு,

கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹாவேரி, பெலகாவி, பாகல்கோட்டை, விஜயாப்புரா, யாதகிரி, கதக், தார்வார் உள்பட 12 மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது.

விஜயாப்புரா மாவட்டத்தில் உள்ள ஆலமட்டி அணைக்கு நீர்வரத்து 2 லட்சம் கனஅடியாக உள்ளது. இதனால் கிருஷ்ணா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில், பெலகாவி மாவட்டத்தில் கோகாக் நகரில் பெய்த கனமழைக்கு நேற்று முன்தினம் வரை 7 பேர் மரணம் அடைந்தனர்.

மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று பெய்த மழைக்கு 5 பேர் மரணம் அடைந்ததாக கூறப்படுகிறது. இதனால் கர்நாடகத்தில் கனமழைக்கு இதுவரை 12 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com