

டெஹ்ராடூன்,
உத்தராகண்ட் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள ஆறுகளில் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. உத்தராகண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில் நேற்று பல பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் கனமழை காரணமாக, அங்கு பாயும் சாரதா ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டேடுகிறது. இதனால் சம்பாவத் மாவட்டத்தில் உள்ள பான்பாஷாவில் அமைந்துள்ள அணை நிரம்பி வழிகிறது. அணைக்கு வரும் உபரி நீர் அப்படியே திறந்துவிடப்பட்டு உள்ளதால், உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள 2 மாவட்டங்கள் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் உள்ள 10 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.