உ.பி.யில் கடும் பனிப்பொழிவு - மக்கள் அவதி

உத்தர பிரதேசம் மாநிலத்தில் இன்று அதிகாலை கடும் பனிப்பொழிவு காணப்பட்டது.
உ.பி.யில் கடும் பனிப்பொழிவு - மக்கள் அவதி
Published on

லக்னோ,

வடமாநிலங்களை கடும் குளிர் வாட்டி வரும் நிலையில், உத்தர பிரதேசம் மாநிலத்தில் இன்று அதிகாலை கடும் பனிப்பொழிவு காணப்பட்டது.

அந்த மாநிலத்தின் கான்பூர் மாவட்டத்தில் கட்டிடங்கள், வாகனங்கள், மரங்கள் பனி மூடி காணப்பட்டன. சாலைகளிலும் பனிப்பொழிவு நீடித்தன. மாநிலத்தில் நிலவி வரும் கடும் பனிபொழிவால் மக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். பனிபொழிவால் காலையிலேயே வாகனங்கள் முகப்பு விளக்கை எரிய விட்டபடி சென்றன.

இதேபோல், அம்மாநிலத்தின் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் அதிகாலையில் பனிப்பொழிவு நீடிக்கிறது என்றும், ஒரு வாரத்திற்கு இந்த பனிப்பொழிவு நீடிக்கும் என இந்தியா வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com