பெண் கிரிக்கெட் வீராங்கனைக்கு காவல்துறையில் உயர் பதவி

சமீபத்தில் மகளிர் கிரிக்கெட் உலகக்கோப்பை போட்டியில் பங்கேற்ற சுஷ்மா வர்மாவிற்கு காவல்துறையில் உயர் பதவி வழங்கப்படவுள்ளது.
பெண் கிரிக்கெட் வீராங்கனைக்கு காவல்துறையில் உயர் பதவி
Published on

சிம்லா

இமாச்சலப் பிரதேச முதல்வர் வீர்பத்ரசிங் இவரது சாதனை குறித்து மாநில மக்கள் பெருமையடைவதாக தெரிவித்தார். சர்வதேச கிரிக்கெட்டில் அவரது சாதனை குறிப்பிடத்தகுந்தது என்றார் அவர். இதனை பாராட்டும் விதத்தில் அவருக்கு துணை காவல்துறை கண்காணிப்பாளர் பதவி வழங்கப்படவுள்ளது என்றார் முதல்வர்.

சுஷ்மா, சிம்லா கிராமப்புறப் பகுதியான ஹிம்ரி பஞ்சாயத்தைச் சேர்ந்தவராவார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com