

புனே
மராட்டியத்தில் மிஸ் புனே அழகி போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றவர் துவிஷா சர்மா (வயது 31). வழக்கறிஞரான சமர்த் சிங் என்பவருடன் டேட்டிங் செயலி மூலம் தொடர்பு ஏற்பட்டு, கடந்த ஆண்டு இவர்களின் திருமணம் நடந்தது. மத்திய பிரதேசத்தின் போபால் நகரில் கணவர் மற்றும் ஓய்வு பெற்ற நீதிபதியான மாமியார் கிரிபலா சிங் ஆகியோருடன் ஒன்றாக வசித்து வந்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, கணவர் வீட்டில் தூக்கு போட்டு துவிஷா தற்கொலை செய்து கொண்டார். அவருடைய மரணத்தில் மர்மம் உள்ளது, உடலுக்கு இறுதி சடங்கு செய்ய முடியாது என்று கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களுடைய புகாரின் பேரில் வரதட்சணை கொடுமை மற்றும் தற்கொலைக்கு தூண்டுதல் வழக்கை போலீசார் பதிவு செய்துள்ளனர். துவிஷா தற்கொலை செய்வதற்கு முன்பு நரகத்தில் இருக்கிறேன். என்னை அழைத்து செல்லுங்கள் என்று தாயார் மற்றும் தோழிகளுக்கு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.
இந்நிலையில் சமர்த் சிங் தப்பியோடி விட்டார். அவரை பற்றி தகவல் அளிப்போருக்கு ரூ.10 ஆயிரம் பரிசு அளிக்கப்படும் என போலீசார் தெரிவித்து உள்ளனர்.