குரங்கு அம்மை வைரசை ஐ.சி.எம்.ஆர். பிரித்து எடுத்தது - தடுப்புமருந்து கண்டுபிடிக்க வழிபிறக்கும் என தகவல்

நோயாளி ஒருவரிடம் இருந்து பெறப்பட்ட ஆஸ்பத்திரி மாதிரியில் இருந்து குரங்கு அம்மை வைரஸ் பிரித்து எடுக்கப்பட்டுள்ளது.
குரங்கு அம்மை வைரசை ஐ.சி.எம்.ஆர். பிரித்து எடுத்தது - தடுப்புமருந்து கண்டுபிடிக்க வழிபிறக்கும் என தகவல்
Published on

புதுடெல்லி,

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐ.சி.எம்.ஆர்.) கீழ் புனேயில் செயல்படுவது, தேசிய நச்சுயிரியல் நிறுவனம். இந்த நிறுவனம், நோயாளி ஒருவரிடம் இருந்து பெறப்பட்ட ஆஸ்பத்திரி மாதிரியில் இருந்து குரங்கு அம்மை வைரசை பிரித்து எடுத்துள்ளது.

இதனால், குரங்கு அம்மை கண்டுபிடிக்கும் உபகரணம் மற்றும் அதன் தடுப்புமருந்து தயாரிப்புக்கு வழிபிறக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. மேலும் இந்த நோய்க்கான தடுப்பூசிகள், தடுப்பு மருந்துகளை உருவாக்க மருந்து நிறுவனங்களுக்கு ஐ.சி.எம்.ஆர். அழைப்பு விடுத்துள்ளது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com