சத்தீஸ்கரில் 71 பழங்குடியினர்கள் கொலை: பாஜகவினர் ஏதாவது சதி செய்கிறார்களா? -முதல் மந்திரி பூபேஷ் பாகேல்

நமது பழங்குடியின சகோதரர்கள் 71 பேர் சத்தீஸ்கரில் கொல்லப்பட்டனர் என்று பாஜக தலைவர் நட்டா பேசினார்.
சத்தீஸ்கரில் 71 பழங்குடியினர்கள் கொலை: பாஜகவினர் ஏதாவது சதி செய்கிறார்களா? -முதல் மந்திரி பூபேஷ் பாகேல்
Published on

ராய்ப்பூர்,

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் அகில இந்திய ஒருங்கிணைப்பு கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்பதற்காக பாஜக தேசியத் தலைவர் நட்டா செப்டம்பர் 9ஆம் தேதி ராய்ப்பூர் வந்தடைந்தார்.

அன்று அறிவியல் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற தொழிலாளர் மாநாட்டில் காங்கிரஸை தாக்கி நட்டா பேசினார். அவர் பேச்கையில், "நமது பழங்குடியின சகோதரர்கள் 71 பேர் இங்கு கொல்லப்பட்டனர். ஆனால் பூபேஷ் பாகேல் ஜி கேரளாவில் ராகுல் காந்தியுடன் கைதட்டி கொண்டிருந்தார்" என்று பேசினார்.

இதற்கு சத்தீஸ்கர் முதல் மந்திரி பூபேஷ் பாகேல் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து பூபேஷ் பாகேல் கூறுகையில்,

சத்தீஸ்கரில் அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை. ஒருவேளை அவர்கள் மனதில் இதுபோன்ற விஷயங்கள் இருக்கலாம். சதி செய்வதில் அவர்களுக்கு இணை இல்லை.அவர் (நட்டா) அப்படி ஒரு சம்பவம் நடக்க சதி செய்கிறார் எனலாம், சதித்திட்டம் தீட்டப்பட்டிருந்தால் அதை முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். ஒருவேளை இது அவருடைய மனதில் இருக்கிறதா?

அவரது ஆட்சியில் கிராம மக்கள், அரசியல்வாதிகள், ஜவான்கள் அனைவரும் கண்டிப்பாக இறந்திருக்கிறார்கள். அவர் பொய்களைச் சொல்வதில் வல்லவர். அவர் சத்தீஸ்கர் மக்களிடமும் பழங்குடியினரிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும்.அவர் சொல்லும் எந்தச் சம்பவமும் நடக்கவில்லை. அவர் எப்படி இவ்வளவு பெரிய பொய்யை பேசுகிறார்?

எங்கள்(காங்கிரஸ்) ஆட்சியில் பணம் சாமானியர்களுக்கு செல்கிறது. அவர் பழங்குடியினராக இருந்தாலும், விவசாயியாக இருந்தாலும், தொழிலாளியாக இருந்தாலும் அல்லது பழங்குடியினராக இருந்தாலும், அனைவரின் பாக்கெட்டிலும் பணம் செல்கிறது. இதை அவர்களால்(பாஜக) தாங்க முடியாது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com