ரூ.1,000 கோடி இழப்பீடு கேட்டு பாபா ராம்தேவுக்கு இந்திய மருத்துவ சங்கம் நோட்டீஸ்

ரூ.1,000 கோடி இழப்பீடு கேட்டு பாபா ராம்தேவுக்கு இந்திய மருத்துவ சங்கம்(உத்தரகாண்ட்) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ரூ.1,000 கோடி இழப்பீடு கேட்டு பாபா ராம்தேவுக்கு இந்திய மருத்துவ சங்கம் நோட்டீஸ்
Published on

புதுடெல்லி,

யோகா குரு பாபா ராம்தேவ் அலோபதி (ஆங்கில) மருத்துவம் குறித்து கடும் விமர்சனங்களைத் தெரிவித்து இருந்தார். அவர் ஆங்கில மருத்துவத்தை 'முட்டாள் மருத்துவம்' எனக் கூறியிருந்தார்.

மேலும் இதுகுறித்து அவர் பேசிய வீடியோவில், ஆங்கில மருந்துகளை சாப்பிட்ட லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்து உள்ளனர், இந்திய மருந்து கட்டுப்பாட்டு நிறுவனம் ஒப்புதல் அளித்த ரெம்டெசிவிர், பவிபுளு, மற்ற மருந்துகள் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க தவறிவிட்டது என கூறியிருந்தார்.

ராம்தேவின் கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்திய மருத்துவ சங்கம் எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன், ராம்தேவுக்கு கருத்தைத் திரும்பப் பெறுமாறு வேண்டுகோள் விடுத்து இருந்தார். இதனையடுத்து, தனது டுவிட்டர் பக்கத்தில், கருத்தை திரும்பப் பெறுவதாக அறிவித்த ராம்தேவ், யாரையேனும் காயப்படுத்தியிருந்தால் வருத்தம் தெரிவிப்பதாகக் கூறியிருந்தார்.

இந்த நிலையில், அலோபதி மருத்துவத்தை தவறாகப் பேசிய பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவ், அடுத்த 15 நாட்களில் எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் இல்லாவிடில் ரூ.1000 கோடி இழப்பீடு தரவேண்டும் என்றும் கோரி இந்திய மருத்துவ சங்கம்(உத்தரகாண்ட்) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com