சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது கண்டன தீர்மானம் கொண்டு வர காங்கிரஸ் முயற்சி

சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது கண்டன தீர்மானம் கொண்டு வரும் முயற்சியில் காங்கிரஸ் ஈடுபட்டு உள்ளது. #DipakMisra #Congress
சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது கண்டன தீர்மானம் கொண்டு வர காங்கிரஸ் முயற்சி
Published on

புதுடெல்லி

சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவிற்கு எதிராக, பாராளுமன்றத்தில் கண்டன தீர்மானம் கொண்டு வர காங்கிரஸ் முயற்சி மேற்கொண்டுள்ளது. இதற்காக, கூட்டணியில் உள்ள கட்சிகளின் ஆதரவை நாடியுள்ளது .

தீபக் மிஸ்ரா, நீதித்துறை நிர்வாகத்தை தவறாக பயன்படுத்துகிறார், சக நீதிபதிகளின் அதிருப்திக்கு ஆளானவர் உள்ளிட்ட 5 குற்றச்சாட்டுகளை ஆதாரமாக வைத்து, காங்கிரஸ் கையெழுத்து இயக்கத்தையும் தொடங்கி உள்ளது.

இதில் சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் எம்.பி.க்கள் கையெழுத்திட்டுள்ளனர். காங்கிரஸின் இம்முயற்சிக்கு கூட்டணியில் உள்ள சில கட்சிகளும் சில எதிர்க்கட்சிகளும் ஆதரவு தராது என்றும் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com