தங்கக் கடத்தல் வழக்கு விவகாரத்தில் அமலாக்கத் துறை மீது கேரள போலீசார் வழக்குப்பதிவு

தங்கக் கடத்தல் வழக்கு விவகாரத்தில் அமலாக்கத் துறை மீது கேரள போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தங்கக் கடத்தல் வழக்கு விவகாரத்தில் அமலாக்கத் துறை மீது கேரள போலீசார் வழக்குப்பதிவு
Published on

திருவனந்தபுரம்

தூதரகங்களுக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு சலுகைகளை பயன்படுத்தி ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து கேரளாவுக்கு தங்கம் கடத்தி வரப்பட்ட புகாரில் சுவப்னா சுரேஷ், சந்தீப் நாயர் உள்ளிட்டேர் கைது செய்யப்பட்டு விசாரித்து வருகின்றனர். இது தெடர்பான வழக்கை அமலாக்கத்துறை, தேசிய புலனாய்வு முகமை, சுங்கத் துறை ஆகிய அரசு அமைப்புகள் பல்வேறு கேணங்களில் விசாரித்து வருகின்றன

தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சுவப்னா சுரேஷை முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு எதிராக பெய்யான வாக்குமூலம் தர வற்புறுத்தியதாக அவ்வழக்கில் கூறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தங்கக் கடத்தல் வழக்கு தெடர்பாக கைது செய்யப்பட்டுள்ள சுவப்னா சுரேஷை கடந்த ஆகஸ்ட் மாதம் அமலாக்கத்துறையினர் விசாரித்தனர்.

அப்பேது கேரள முதல்வருக்கு எதிராக வாக்குமூலம் தரக்கேரி தன்னை அமலாக்கத்துறையினர் வற்புறுத்தினர் என சுவப்னா சுரேஷ் கூறுவது பேன்ற குரல் பதிவு ஒன்று வெளியாகியிருந்தது. அந்த பதிவில் இருந்தது தன் குரல்தான் என சுவப்னா சுரேஷ் ஒப்புக்கெண்டிருந்தார். இந்நிலையில் அமலாக்கத்துறை மீது போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த முதலமைச்சர் பினராயி விஜயன், சட்டவிரேதமாக ஒரு செயலை செய்யும்பேது தங்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை பாயும் என்பதை அதிகாரிகள் உணர்ந்திருக்க வேண்டும் என கூறினார்.

மத்திய அரசு அமைப்பிற்கு எதிராக மாநில போலீஸ் வழக்கு தெடர்ந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com