

பெங்களூரு,
கர்நாடக சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கர்நாடகத்தில் நேற்று 94 ஆயிரத்து 43 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 1,798 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது. இதன்மூலம் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9 லட்சத்து 68 ஆயிரத்து 487 ஆக அதிகரித்து உள்ளது.
புதிதாக பாகல்கோட்டையில் 15 பேர், பல்லாரியில் 26 பேர், பெலகாவியில் 20 பேர், பெங்களூரு புறநகரில் 22 பேர், பெங்களூரு நகரில் 1,186 பேர், பீதரில் 49 பேர், சாம்ராஜ்நகரில் 4 பேர், சிக்பள்ளாப்பூரில் 23 பேர், சிக்கமகளூருவில் 2 பேர், சித்ரதுர்காவில் 5 பேர், தட்சிண கன்னடாவில் 52 பேர், தாவணகெரேயில் 10 பேர், தார்வாரில் 16 பேர், கதக்கில் 5 பேர், ஹாசனில் 32 பேர், கலபுரகியில் 61 பேர், குடகில் 3 பேர், கோலாரில் 20 பேர், கொப்பலில் 5 பேர், மண்டியாவில் 18 பேர், மைசூருவில் 59 பேர், ராய்ச்சூரில் 6 பேர், ராமநகரில் 5 பேர், சிவமொக்காவில் 14 பேர், துமகூருவில் 43 பேர், உடுப்பியில் 66 பேர், விஜயாப்புராவில் 29 பேர், யாதகிரியில் 2 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
அதுபோல் நேற்று வைரஸ் தொற்றுக்கு மேலும் 7 பேர் இறந்தனர். இதனால் சாவு எண்ணிக்கை 12 ஆயிரத்து 432 ஆக உயர்ந்து உள்ளது. பெங்களூரு நகரில் 5 பேர், பீதர், விஜயாப்புராவில் தலா ஒருவர் இறந்தனர். நேற்று 1,030 பேர் டிஸ்சார்ஜ் ஆனார்கள். இதுவரை 9 லட்சத்து 43 ஆயிரத்து 208 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
கொரோனா பாதித்தவர்களில் 12 ஆயிரத்து 828 பேர் சிகிச்சையில் உள்ளனர். 134 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை 2 கோடியே 28 லட்சத்து 7 ஆயிரத்து 369 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. நேற்று ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 874 பேருக்கு 3-வது கட்ட கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.
ஹாவேரி, உத்தர கன்னடா ஆகிய 2 மாவட்டங்களில் நேற்று கொரோனாவுக்கு யாரும் பாதிக்கப்படவில்லை. அதுபோல 28 மாவட்டங்களில் கொரோனாவுக்கு உயிரிழப்பும் இல்லை. ஆனால் பெங்களூரு நகரில் 2-வது நாளாக கொரோனா பாதிப்பு ஆயிரத்திற்கும் மேல் பதிவாகி உள்ளது.