

பெங்களூரு,
கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் (கே.ஆர்.எஸ்.) அணையில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பொழுதுபோக்கு பூங்கா (டிஸ்னிலேண்ட்) அமைக்க கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. கே.ஆர்.எஸ். முன்பு உள்ள பிருந்தாவன் பூங்கா புதிய தொழில்நுட்பத்தில் மேம்படுத்தப்படும்.
கே.ஆர்.எஸ். அணை, பிருந்தாவன் பூங்கா மற்றும் புதிய பொழுதுபோக்கு பூங்கா ஆகியவற்றை பார்வையிட வியூவிங் டவர் அமைக்கப்படும். பொழுதுபோக்கு பூங்காவில் காவிரித்தாய் மற்றும் கிருஷ்ணராஜ உடையார் சிலைகளும் அமைக்கப்படுகிறது. இந்த திட்டத்துக்கு சுமார் ரூ.1,500 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது என கர்நாடக மந்திரி டி.கே.சிவக்குமார் கூறினார்.