வேலையில்லாத இளைஞர்களுக்கு ரூ. 2,500 உதவித்தொகை - சத்தீஸ்கர் முதல்-மந்திரி அசத்தல் அறிவிப்பு

சத்தீஸ்கரில் பிளஸ் 2 வகுப்பில் தேர்ச்சி பெற்ற 18 வயது முதல் 35 வயது வரையிலான வேலை இல்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூ.2,500 உதவித்தொகை வழங்கப்படும் என அம்மாநில முதல்-மந்திரி பூபேஷ் பாகல் அறிவித்துள்ளார்.
வேலையில்லாத இளைஞர்களுக்கு ரூ. 2,500 உதவித்தொகை - சத்தீஸ்கர் முதல்-மந்திரி அசத்தல் அறிவிப்பு
Published on

சத்தீஸ்கரில் பிளஸ் 2 வகுப்பில் தேர்ச்சி பெற்ற 18 வயது முதல் 35 வயது வரையிலான வேலை இல்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூ.2,500 உதவித்தொகை வழங்கப்படும் என அம்மாநில முதல்-மந்திரி பூபேஷ் பாகல் அறிவித்துள்ளார்.

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு மாதாந்திர ஊக்க தொகையாக 2 ஆயிரத்து 500 ரூபாய் வழங்கப்படும் என சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் அறிவித்துள்ளார்.

2023-24 ம் ஆண்டுக்கான சட்டீஸ்கர் மாநில பட்ஜெட்டை பூபேஷ் பாகேல்தாக்கல் செய்தார். அதன்படி 18-35 வயதுக்குட்பட்ட வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு மாதாந்திர ஊக்கத் தொகையாக ரூ.2500 வழங்கப்படும் என அறிவித்துள்ளார். ஆண்டுக்கு 2.5 லட்சம் ரூபாய் வருவாய் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு இந்த தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

இவை தவிர அங்கன்வாடி ஊழியர்களுக்கான மாதாந்திர ஊதியத்தை ரூ.6500 -இல் இருந்து பத்தாயிரம் ரூபாயாக அதிகரித்து பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com