சுள்ளியாவில் வாலிபர் அடித்து கொலை; 8 பேர் கைது

சுள்ளியாவில், வாலிபரை அடித்து கொன்ற 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
சுள்ளியாவில் வாலிபர் அடித்து கொலை; 8 பேர் கைது
Published on

மங்களூரு;

வாலிபர் அடித்து கொலை

தட்சிண கன்னடா மாவட்டம் சுள்ளியா தாலுகா கலஞ்சா பகுதியை சேர்ந்தவர் அபூபக்கர் முக்தி. இவரது வீட்டில் கேரள மாநிலம் காசர்கோடுவை சேர்ந்த மசூத்(வயது 18) என்பவர் வேலை பார்த்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்றுமுன்தினம் மாலை மசூத் என்பவரை, 8 பேர் கொண்ட கும்பல் தடுத்து மிரட்டி அபூபக்கர் முக்தியை அழைத்து வரும்படி கூறியுள்ளனர். அதன்படி மசூத்தும், தொழிலதிபர் அபூபக்கர் முக்தியை வரவழைத்துள்ளார்.

அப்போது 8 பேரும் சேர்ந்து அபூபக்கர் முக்தியை சரமாயாக அடித்துள்ளனா. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த மசூத், 8 பேரையும் தடுக்க முயன்றார். அப்போது அவர்கள், மசூத்தை சரமாரியாக அடித்துவிட்டு தப்பியோடிவிட்டனர்.

இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த அபூபக்கர் முக்தி, மசூத் ஆகியோர் மங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி மசூத் பரிதாபமாக உயிரிழந்தார்.

தொடர்ந்து அபூபக்கர் முக்திக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

8 பேர் கைது

இதுகுறித்த புகாரின் பேரில் சுள்ளியா போலீசார் வழக்குப்பதிவு செய்துகொண்டனர். மேலும் 8 பேரை கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் அபிலாஷ், சுனில், சிவா, ரஞ்சித், சதாசிவா, ஜிம் ரஞ்சித், பாஸ்கர் உள்பட 8 என்பது தெரியவந்தது.

முன்விரோதத்தில் அவர்கள், தொழிலதிபரை தாக்கியதில் தடுக்க வந்த மசூத்தையும் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த மசூத் உயிரிழந்தது தெரியவந்தது. கைதான 8 பேரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com