சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் தொழிலாளிக்கு 3½ ஆண்டு சிறை

சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் தொழிலாளிக்கு 3½ ஆண்டு சிறை விதித்து புத்தூர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் தொழிலாளிக்கு 3½ ஆண்டு சிறை
Published on

மங்களூரு-

சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் தொழிலாளிக்கு 3 ஆண்டு சிறை விதித்து புத்தூர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

சிறுமி பலாத்காரம்

தட்சிண கன்னடா மாவட்டம் கடபா தாலுகா குந்தூர் பகுதியை சேர்ந்தவர் ராஜிக். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் குந்தூர் பகுதியில் பள்ளிக்கு செல்லும் சிறுமியிடம் ராஜிக் பேசி வந்துள்ளார். அப்போது சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி ராஜிக் பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்றுள்ளார். இந்தநிலையில் கடந்த 2012-ம் ஆண்டு பள்ளிக்கு சென்ற அந்த சிறுமியை அருகே உள்ள பாழடைந்த கட்டிடத்திற்கு அழைத்து சென்று ராஜிக் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் இதனை யாரிடமும் கூறக்கூடாது என சிறுமியை அவர் மிரட்டி உள்ளார். இந்தநிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சிறுமியை ராஜிக் அடிக்கடி பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார்.

3 ஆண்டுகள் சிறைத்தண்டனை

சிறுமி சில நாட்களாக யாரிடமும் பேசாமல் இருந்துள்ளாள். இதுகுறித்து பெற்றோர் சிறுமியிடம் கேட்டனர். அப்போது சிறுமி தனக்கு நடந்த கொடுமைகளை பெற்றோரிடம் கூறி கதறி அழுதுள்ளாள். இதையடுத்து சிறுமியின் பெற்றோர் கடபா போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜிக்கை கைது செய்தனர்.

பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார். இதுதொடர்பான வழக்கு புத்தூர் கூடுதல் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. கடபா போலீசார் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்த வழக்கின் விசாரணை நிறைவு பெற்றதை தொடர்ந்து நீதிபதி யோகேந்திரா ஷெட்டி தீர்ப்பு கூறினார். அதில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ராஜிக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டையும், ரூ.1,500 அபராதமும் விதித்து உத்தரவிட்டார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com