விளையாட்டு வரலாற்றில், பாராஒலிம்பிக்கிற்கு எப்போதுமே ஒரு சிறப்பு இடம் இருக்கும் - பிரதமர் மோடி

இந்திய விளையாட்டு வரலாற்றில், பாராஒலிம்பிக்கிற்கு எப்போதுமே ஒரு சிறப்பு இடம் இருக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
விளையாட்டு வரலாற்றில், பாராஒலிம்பிக்கிற்கு எப்போதுமே ஒரு சிறப்பு இடம் இருக்கும் - பிரதமர் மோடி
Published on

புதுடெல்லி,

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டிகளில் 19 பதக்கங்களை வென்று இந்தியா வரலாற்று சாதனை படைத்துள்ளது. பாராஒலிம்பிக் போட்டிகளில் வெற்றிபெற்ற வீரர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

இந்நிலையில், இந்தியாவின் இந்த சாதனை குறித்து பிரதமர் மோடி டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

அதில், இந்திய விளையாட்டு வரலாற்றில், டோக்கியோ பாராஒலிம்பிக்கிற்கு எப்போதுமே ஒரு சிறப்பு இடம் இருக்கும். இந்த விளையாட்டுகள் ஒவ்வொரு இந்தியரின் நினைவிலும் பொறிக்கப்படும். இந்த சாதனை அடுத்த தலைமுறை வீரர்களை விளையாட்டுக்கு ஊக்குவிக்கும். எங்கள் குழுவின் ஒவ்வொரு உறுப்பினரும் ஒரு சாம்பியன் மற்றும் உத்வேகத்தின் ஆதாரம்.

இந்தியா வென்ற வரலாற்றுப் பதக்கங்களின் எண்ணிக்கை எங்கள் இதயங்களை மகிழ்ச்சியால் நிரப்பியுள்ளது. பயிற்சியாளர்கள், ஆதரவு ஊழியர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களின் குடும்பங்கள் வீரர்களுக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதை நான் பாராட்ட விரும்புகிறேன்.

போட்டிகளில் பங்கேற்பதன் மூலம் வெற்றிகளை உருவாக்க முடியும் என நம்புகிறோம்.

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com